2 Feb 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் பணி


இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கடலோர காவல் படையில் பயிற்சியுடன் கூடிய 'யந்த்ரிக்' பணிக்கு டிப்ளமோ முடித்த இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும். அதாவது 1.8.1994 - 31.7.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:பொறியியில் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.2.2016.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை 2 பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.