13 Jan 2016

பணிமனை உதவியாளர் பணிக்கு ஜனவரி 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணி இடத்துக்கு ஜனவரி 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

 ஈரோடு அரசு தொழிற்பயிற்சி மையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பதவிக்கு டெக்ஸ்டைல் வெட் பிராசஸிங் டெக்னீஷியன் என்ற பிரிவில் முன்னுரிமை உள்ளவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 ரூ.5200-20200 மதிப்பூதியம் ரூ.1,900 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதற்கு, பொதுக் கல்வியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மேற்படி தொழிற்பிரிவில் தேர்ச்சி, முன் அனுபவம் பெற்றவர்களாகவும், 1.1.2016-ஆம் தேதியன்று 18 முதல் 35 வயது வரையிலானவர்களாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 
முதல்வர், 
அரசு தொழிற்பயிற்சி நிலையம், 
ஈரோடு-638009 

என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அலுவலகத்துக்கு ஜனவரி 22-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும். அதன்பின் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.