13 Jan 2016

தமிழக அரசில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 3 வருட ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sipcot.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
  அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், 
19-ஏ, ருக்மணி இலட்சுமிபதி சாலை, 
எழும்பூர், 
சென்னை-600 008.

மேலும் விவரங்கள் அறிய www.sipcot.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.