1 Mar 2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016

பணி: பல்வினைப் பணி

காலியிடங்கள்: 127

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900

வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.