22 Jan 2016

இந்திய விமான ஆணையத்தில் 200 பணியிடங்கள்

இந்திய விமான ஆணையத்தில் (Airports Authority of India) காலியாக உள்ள 200 ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பி.எஸ்சி. இயற்பியல், கணிதவியல், பி.இ., பி.டெக். எலக்ட்ரானிக்ஸ்,
 டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 


27 வயதுக்கு உட்பட்டவர்களே விண்ணப்பிக்க இயலும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

www.aai.aero/hindi/hindimain.jsp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
30.1.2016க்குள் ஸ்டெப் 1 விண்ணப்பத்தையும் 
9.2.2016க்குள் ஸ்டெப்-2 விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.