கோவா அருகே உள்ள டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் தீயணைப்பு மற்றும் அவசர சேவை பிரிவில் 16 டிரைவர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் (குருப் ‘சி’) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:
டிரைவர் மற்றும் பம்ப் ஆபரேட்டர்.
16 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 4, எஸ்டி - 1).
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை இயக்குவதில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு திறனறி தேர்வு வைக்கப்படும். பிளஸ் 2வில் கம்ப்யூட்டர் அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை படித்திருப்பது விரும்பத்தக்கது.
உடல் தகுதிகள்:
ஷூக்கள் அல்லது பூட்ஸ்கள் அணியாமல் உயரம்: 165 செ.மீ., மார்பளவு (சாதாரண நிலையில்) 79 செ.மீ., விரிவடைந்த நிலையில்: 84 செ.மீ.,
உடல் திறன்
50 கிலோ எடையுடன் 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். 4 மீட்டர் உயரத்திற்கு கயிறு ஏற வேண்டும். தூரப் பார்வை திறன் 6/6 என்ற அளவிலும், கிட்டப் பார்வை திறன் 0.5 என்ற அளவிலும் இருக்க வேண்டும். 50 மீட்டர் தூரத்திற்கு நீச்சல் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 6 மாதங்கள் தீத்தடுப்பு பயிற்சியளிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பத்தை www.daman.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Office of Inspector General of Police/Director of Fire & Emergency Services,
Daman & Diu, Police Headquarter,
Dunetha,
Nani Daman- 396210.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.2.2016.