15 Feb 2016

சிஆர்பிஎப்-ல் ஏஎஸ்ஐக்கள்


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 229 ஏ.எஸ்.ஐ. காலியிடங்கள் உள்ளன. ஆங்கில சுருக்கெழுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி: 

Assistant Sub Inspector (Stenographer):

229 இடங்கள் (பொது-78, ஒபிசி-75, எஸ்சி-46, எஸ்டி-30).

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

வயது வரம்பு: 

1.3.2016 தேதிப்படி 18 முதல் 25க்குள்.

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சி.

உடல் தகுதி: 

ஆண்கள் உயரம்: 165 செ.மீ., மார்பளவு-77 செ.மீ., விரிவடைந்த நிலையில் 82 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் உடற்தகுதி மற்றும் சுருக்கெழுத்து எழுதி டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10 நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும் அல்லது இந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.100. இதை www.crpfindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் நெட் பேங்கிங்/கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி.,எஸ்டி., முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.crpfindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.3.2016.